உத்தரப்பிரதேசத்தில் புழுதிப் புயலாலும், வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்தாலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீதாப்பூர், கோண்டா, கவுசாம்பி, பைசாபாத், ஹர்தோய், சித்திரக்கூட் ஆகிய மாவட்டங்களில் நேற்றுப் புழுதிப் புயல் வீசியது.
இதில் கட்டடங்களின் கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் 15பேர் உயிரிழந்தனர். 28பேர் காயமடைந்தனர்.
அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் 7 மாவட்டங்களில் பிரம்மபுத்திரா ஆற்றங்கரைப் பகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 370ஊர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு பணியாளர்களும், ராணுவத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கரீம்கஞ்ச், கோலாகாட் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப் பகுதிகளில் இருந்து 422பேரை மீட்டுள்ளதாகத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…