மழை வெள்ளத்தாலும்,புழுதிப் புயலாலும் பாதிப்புக்குள்ளாகும் வடமாநிலங்கள்..!

Default Image

உத்தரப்பிரதேசத்தில் புழுதிப் புயலாலும், வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்தாலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீதாப்பூர், கோண்டா, கவுசாம்பி, பைசாபாத், ஹர்தோய், சித்திரக்கூட் ஆகிய மாவட்டங்களில் நேற்றுப் புழுதிப் புயல் வீசியது.

இதில் கட்டடங்களின் கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் 15பேர் உயிரிழந்தனர். 28பேர் காயமடைந்தனர்.

அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் 7 மாவட்டங்களில் பிரம்மபுத்திரா ஆற்றங்கரைப் பகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 370ஊர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு பணியாளர்களும், ராணுவத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கரீம்கஞ்ச், கோலாகாட் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப் பகுதிகளில் இருந்து 422பேரை மீட்டுள்ளதாகத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்