ஆந்திராவில் மறைந்த கணவருக்கு கோவில் கட்டி வழிபட்ட மனைவி.
ஆந்திராவில், பிரகாசம் மாவட்டத்தில் பத்மாவதி என்ற பெண் அங்கிரெட்டி என்பவரை திருமணம் செய்தார். இருவரும் பாசப்பறவைகளாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பதாக அங்கி ரெட்டி விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல், தினமும் வருந்தி வந்த இவர், தனது கணவர் தன் அருகிலேயே இருப்பதாக உணர்ந்தாலும், அங்கி ரெட்டி தனக்கு கோயில் கட்டும்படி சொன்னதாலும் தான் இந்த கோவிலை கட்டியதாகவும் பத்மாவதி கூறியுள்ளார்.
இந்த கோவிலில் தனது கணவரை பளிங்கு உருவ சிலையாக அவர் நிறுவியுள்ளார். இந்நிலையில் அவரது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய சிறப்பு நாட்களில் அவரது சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார். கோவில் கட்டி வழிபாடு நடத்துவதோடு நின்றுவிடாமல், பௌர்ணமி அன்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். மறைந்த தனது கணவருக்கு கோவில் கட்டி வழிபடும் இந்தப் பெண்ணின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…