மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்தம்..!

Default Image

மும்பை ஜேஜே மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சயான் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை ஜேஜே மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சூறையாடினர். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகிய இந்த வன்முறைக் காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியது.

மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜேஜே மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக சயான் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்