Categories: இந்தியா

மத்திய திட்டங்கள் செயல்பாடு குறித்து பிரதமர் மோடி ஆய்வு..!

Published by
Dinasuvadu desk

மத்தியில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன.

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

ஆட்சியில் தாங்கள் செய்த சாதனைகளை மக்கள் முன் சொல்லித்தான் ஓட்டு வாங்க முடியும். எனவே மத்திய அரசு இதுவரை நிறைவேற்றி உள்ள திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக அவர் அறிவித்த மிக முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்கிறார்.

நாடு முழுவதும் 50 கோடி பேருக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கும் திட்டமான ‘ஆயுஷ்மேன் பாரத்’ திட்டத்தின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்கிறார்.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள முத்ரா கடன் வழங்கும் திட்டம், உஜ்வாலா கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கான மானிய திட்டம் ஆகியவை சரியான முறையில் செயல்படுகிறதா? என்றும் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை மிக முக்கியமாக கருதி பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் அந்த திட்டம் சரியாக நடைமுறைக்கு வரவில்லை. இது பிரதமரை கவலையடைய செய்துள்ளது.

இதுபோல அல்லாமல் மற்ற திட்டங்கள் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். எனவே அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

Recent Posts

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

14 mins ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

32 mins ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

33 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

44 mins ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

15 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

23 hours ago