மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட்டு, திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி உதவ வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவுகிறது. தன்னிடம் உள்ள நிதியை குறைத்துக் கொண்டு மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் கூட்டத்தில், இதுகுறித்து பரிசீலிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுடன் மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த அவர், தன்னிடம் எவ்வளவு நிதியை வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ரிசர்வ் வங்கி நிர்ணயிக்க வேண்டிய தருணம் இது என்று கூறியுள்ளார்.தன்னிடம் வைத்துள்ள நிதியின் ஒருபகுதியை மத்திய அரசுக்கு ஒதுக்கி, நாட்டின் வறுமையை ஒழிக்க ரிசர்வ் வங்கி உதவ வேண்டும் என்றும் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார்.
dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…