வழக்குகளில் சாட்சியம் அளிப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலான, மத்திய அரசின் வரைவு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
குற்றவியல் நீதி நடைமுறை தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி மலிமாத் குழு, ‘சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என 2003-ம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. அதன்பின், 2006-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய சட்ட ஆணைய அறிக்கையில், இது தொடர்பான வரைவு திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாமியார் ஆசாராம் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், சாட்சியம் அளித்தவர்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘சாட்சியம் அளிப்போருக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு திட்டம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சில திருத்தங்களை கூறியுள்ள உச்சநீதிமன்றம், இந்த வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…