மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்,மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“கடந்த 2 நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்,எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது மற்றும் அதன்பின்னர் வந்தபரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது.கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் உங்களை கவனித்து தேவையான பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதால் அவர் வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…