விமானப்போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு,ஏர் இந்தியா மூத்த நிர்வாகி, தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக, ஏர் இந்தியா விமான பணிப்பெண், டுவிட்டர் மூலம் புகார் தெரிவித்து உள்ளார்.
“நீதி தேவைப்படுகிறது” என்ற தலைப்பில் விமானப்பணிப்பெண் எழுதியிருக்கும் கடிதத்தில், ஒரு மூத்த நிர்வாகி கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புகார் அளித்தால், அந்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, புகாரை பரிசீலிப்பதாக மட்டுமே ஏர் இந்தியா நிர்வாகம் கூறுவதாக குமுறியுள்ளார். மூத்த நிர்வாகியின் பெயரை, தங்களை சந்திக்கும்போது வெளிப்படுத்துவேன் என்றும் விமானப்போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் விமான பணிப்பெண் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைனைவிட ((Harvey Weinstein)) மோசமான பாலியல் வெறிபிடித்தவராக அந்த மூத்த நிர்வாகி இருப்பதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏர் இந்தியா விமான பணிப்பெண் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகார் கடிதத்தின் நகலை, பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் அனுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…