மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு பணத்து மேல பேய் பிடிச்சிருக்கு ! ப.சிதம்பரம்

Published by
Venu

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி அச்சடித்த 2000 நோட்டுகள் பெரும் பண முதலைகளுக்கும், பதுக்கல்காரர்களுக்கே உதவுகிறது என்று விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஆந்திரா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், குஜராத், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் பல நகரங்களில் பணத்தட்டுபாடு கடுமையாக நிலவுகிறது. பணமதிப்பிழப்பு காலத்தில் இருந்ததைப் போல் ஏடிஎம் எந்திரங்களில் பணம் இல்லாமல் பூட்டிக்கிடக்கின்றன.

இந்த நிலை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து மக்கள் பணம் இருக்கும் ஏடிஎம்களை தேடித் அலையும் நிலைக்கு வந்துவிட்டனர். இந்த நிலை விரைவில் சீரடையும், கூடுதலாக 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படும் எனத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் வங்கி மோசடிகளால் மக்கள், வங்கி முறையின் மீதே நம்பிக்கை இழந்துவிட்டனர். இதனால், மக்கள் தங்களிடம் சேமிப்பாக இருக்கும் பணத்தை வங்கியில் வந்து டெபாசிட் செய்ய தயங்குகிறார்கள்.

பணமதிப்பிழப்பு எனும் பேய் மீண்டும மோடி அரசை பிடித்து ஆட்டத் தொடங்கி இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 17 மாதங்களாகியும் கூட இன்னும் ஏடிஎம் மையங்கள் ஏன் காலியாகக் கிடக்கின்றன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்தபின், மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது. ஆனால், தற்போது அந்த 2000 ரூபாய் நோட்டுகளை சில பெரும் பணமுதலைகள், பதுக்கல்காரர்கள் பதுக்கிவிட்டனர். 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது என்பது பெரும் பதுக்கல்காரர்களுக்கு உதவுவதற்குதான் என்பது எப்போதோ நமக்குத் தெரியும்.

நாட்டில் பணத்தட்டுப்பாடு கிடையாது என்று ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பது மனநிறைவை அளிக்கவில்லை. ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிடுகிறது என்றால், ஏன் பணப்பற்றாக்குறை மக்களிடத்தில் ஏற்படுகிறது. அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

பணமதிப்பிழப்பு தடைக்குபின், பணப்புழக்கம் என்பது 2.75 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. அப்படிஎன்றால், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் சீரான அளவில் பணப்புழக்கத்தை கொண்டுவர அனுமதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

சாமானிய மக்கள் வங்கி முறை மீதான நம்பகத்தன்மை குறைவு காரணமாக, தங்களிடம் மீதமிருக்கும் பணத்தை, சேமிக்கும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவரவில்லை என சந்தேக்கிறேன். இதற்கு அனைத்துக்கும் வங்கி மோசடிதான் காரணம்.

நான் வங்கி முறையில், வர்த்தகத்தில் கொண்டுவரப்படும் டிஜிட்டல் முறையை ஆதரிக்கிறேன். ஆனால், பணப்புழக்கத்தை திடீரென ஒட்டுமொத்தமாகக் குறைத்து டிஜிட்டல்முறையை கொண்டுவரமுடியாது என்று  காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago