மணல் கொள்ளையை தடுக்க புதிய திட்டம்!இனி கிராமங்களில் 144 தடை உத்தரவு!

Default Image

மணல் கொள்ளையை தடுக்க, புதுச்சேரியில், சங்கராபரணி ஆற்றில் கரையோர கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வில்லியனூர் துணை ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, கோனேரிக்குப்பம், மணலிப்பட்டு, செட்டிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வழித்தடங்களை கண்டறிந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வருவாய்த்துறை தாசில்தார்கள் தினமும் சங்கராபரணி ஆற்றங்கரை கிராமங்களில் ரோந்து செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்