மகரவிளக்கு பூஜை..!சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம்..!தேவசம் அறிவிப்பு..!!

Default Image

சபரிமலையில் நடைபெறும் மகரவிளக்கு பூஜையின் போது பெண்கள் வரவேண்டாம் என்று தேவஸ்ம்போர்டு வலியுறுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இளம் பெண்கள் மற்றும் பெண்ணிய அமைப்பினர் சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு  மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையிக்கு பெண்கள் வரவேண்டாம் என்று தேவஸம்போர்டு தலைவர் பத்மகுமார் கேட்டுக்கொண்டுள்ளார் . சபரிமலைக்கு பெண்கள் வருவதால் அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும் இதனால் பக்தர்களுக்கு இடையூறு உருவாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்