பொதுச்சொத்துக்களை சொதப்படுத்திய போராட்டக்காரர்கள் மீது ஏன் துப்பாக்கி சூடு நடத்த வில்லை என்று மேற்கு வங்க மாநிலத்தில் நாடியா மாவட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார். இது குறித்து பேசுகையில் கடந்த டிசம்பர் மாதம் ரயில்வே சொத்துகள் மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்திய நபர்கள் மீது ஏன்.? மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தப் படவில்லை இதனால் பொதுச்சொத்துக்கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன. சேதமடைந்த பொருட்களின் சொத்துக்கள் எல்லாம் யாருடைய பணம் ? அவைகள் என்னுடைய பணம். ஏன்.?அது உங்களுடைய பணம்.போராட்டத்தில் ஈடுபட்டோர் ரயில்களில் தீ வைத்து உள்ளனர். இதுவரை ஒரு தடியடியோ அல்லது ஒரு முதல்தகவல் அறிக்கையோ கூட பதிவு செய்ய வில்லை.இது தொடர்பாக காவல்துறை ஒருவரைக் கூட இதுவரை கைது செய்ய வில்லை பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் அது அவர்களுடைய அப்பாவின் சொத்து என நினைத்துக் கொண்டார்களா.? வரி செலுத்துபவர்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட அரசின் சொத்துகளை எல்லாம் எப்படி அவர்கள் சேதப்படுத்த முடியும்.
அசாம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் எங்களுடைய அரசு நாய்களைச் சுட்டுக் கொல்வதைப் போல போராடியவர்களைச் சுட்டுக் கொன்ற படி இங்கும் சுட்டுக் கொல்ல வேண்டும். நாங்கள் உங்களை துப்பாக்கியால் சுடுவோம் மற்றும் தடியடி நடத்துவோம் இவ்வாறு பேசிய நிலையில் மேலும் அவர் உங்களை சிறையில் தள்ளுவோம் என தெரிவித்தார். பாஜகவின் மூத்த தலைவர் திலீப் கோஷின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கபட்டு வருகின்றது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…