போட்டி போட்டு தலைவர்களை அழைக்கும் தேவ கவுடா!யார் யார் பங்கேற்பு?

Default Image

 மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா,வரும் 23-ம் தேதி நடைபெறும் கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்களை ஓரணியில் திரட்டவும் அவர் திட்டமிட்டுள் ளார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவும் 116 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் – மஜத அணியும் ஆட்சியமைக்க உரிமை கோரின. பின்னர் நடந்த பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 19-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலேயே பதவியை ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் – மஜத அணி சார்பில் குமாரசாமியை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கும் 15 நாள்கள் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு குமாரசாமி முதல்வராக பதவியேற்க இருப்பதால் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா திட்டமிட்டுள்ளார்.

சோனியா, ராகுலுக்கு அழைப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மட்டுமல்லாது பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட தேவகவுடா, 23-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்ட பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்களுக்கு தேவகவுடா தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களையும் தேவுகவுடா அழைத்துள்ளதாகக் கூறப்படு கிறது.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளின் தலைவர்களை ஒரே மேடையில் நிறுத்த தேவகவுடா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய இந்த பதவியேற்பு விழாவை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சியும் களமிறங்கியுள் ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கர்நாடகத்தில் மஜதவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் மூலம் பாஜகவை காங்கிரஸ் தனிமைப்படுத்தியுள்ளது. இது வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு கை கொடுக்கும். 2019 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையவும் இது வழிவகுக்கும்’’ என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்