"பொருளாதார குற்றவாளிகள் தப்ப முடியாது" பிரதமர் மோடி உறுதி…!!

Default Image

அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் பொருளாதார குற்றவாளிகள் இனி தப்ப முடியாது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். டெல்லியில் தைனிக் ஜாக்ரான் ஊடக குழு சார்பில் நடந்த மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வெளிநாடு தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகளை இந்தியா கொண்டுவந்து தண்டிக்கும் மசோதா நல்ல பலன் தரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார்.
வங்கி முறைகேடுகளில் ஈடுபட்ட விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோரை வெளிநாடுகளில் இருந்து திரும்ப கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், இனி அவர்கள் தப்ப முடியாது என்றும் மோடி தெரிவித்தார். நேரு குடும்ப ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையவில்லை எனவும், எந்த பிரச்சனைக்கும் அவர்கள் தீர்வு காணவில்லை எனவும் காங்கிரசை விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்