புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 44). பொதுப்பணித்துறை ஊழியர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டபோது அதற்கான பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளங்கோவன் நேற்று அதே ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது ஓட்டல் உரிமையாளர் ரவிச்சந்திரன் (54). முன்பு ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காதது குறித்து தட்டிக்கேட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் ரவிச்சந்திரன் பொதுப்பணித்துறை ஊழியர் இளங்கோவனை சரமாரியாக தாக்கினார்.
இதில், இளங்கோவனுக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் ரவிச்சந்திரனை கைது செய்தனர்
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…