"பேருந்தை ஒட்டிய குரங்கு" ஊழியர் பணி நீக்கம்..!!

Default Image
கர்நாடகாவில் குரங்கை வைத்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பஸ்சின் டிரைவர் பார்த்து ரசிப்பதுடன், முன்னால் பார்த்து ஸ்டீரியங்கை இப்படி திருப்பு… அப்படி திருப்பு என சொல்கிறார். ஆனால் அந்த குரங்கோ ஸ்டீரியங் மீது அமர்ந்துகொண்டு அது இஷ்டத்திற்கு பஸ்சை ஓட்டுகிறது.ஆபத்தை அறியாமல் குரங்குடன் விளையாடி பொதுமக்களின் உயிருக்கு உலைவைக்க கூடிய வகையில் நடந்த இந்த காட்சிகளை பஸ்சில் பயணித்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.
டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து  பேருந்து ஓட்டுநர் பிரகாஷை கர்நாடக மாநில பேருந்து போக்குவரத்து நிர்வாகம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து நிர்வாகம்,   கர்நாடக மாநிலம் தவங்கரேயில் அரசுக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி-யில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் பிரகாஷ்.  இவர் குரங்கை ஒன்றை வளர்த்து வருகிறார்.  அந்த குரங்கை வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு பயிற்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பணிக்கு வரும் போதும் அந்த குரங்கை அவ்வப்போது அழைத்து வருவாராம்.  இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்