புதுச்சேரி விமான நிலையத்தில் விஐபிக்களுக்கான அறையில் உயரதிகாரிகள் கூட்டத்தில் புகுந்த விரியன் (Viper) வகைப் பாம்பை பெண் ஊழியர் ஒருவர் துடைப்பத்தால் விரட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
நேற்று புதுச்சேரி விமான நிலையத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் குருபிரசாத் மொஹபத்ரா தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது 6 அடி நீளமுள்ள விரியன் வகைப் பாம்பு, இருக்கைகளுக்கு அடியில் ஊர்ந்து வந்ததைக் கண்ட சிலர் அஞ்சி ஒதுங்கினர்.
அப்போது பெண் ஊழியர் ஒருவர் தரை துடைப்பானைக் கொண்டு அதை வெளியே விரட்டினார். இதையடுத்து, புதுச்சேரி ஐஆர்பி படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் தியாகு பாம்பைப் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தார். தியாகுவுக்கு வெகுமதியும் பாராட்டும் வழங்கப்பட்ட நிலையில், கொடிய பாம்பைக் கண்டும் தைரியமாக செயல்பட்ட பெண் ஊழியர் நாளை கவுரவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…