புதுச்சேரியில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது!

Default Image

புதுச்சேரியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்த 16 வயது சிறுமிக்கும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த விக்கி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமியை தோப்புக்கு அழைத்து சென்ற விக்கி,அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார் தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்து போதை மருந்து கொடுத்து 7 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.அதன் பின் தனது பெற்றோரிடம் தெரிவித்த அந்த சிறுமி நடந்ததை கூறி அழுதுள்ளார் இதுகுறித்து குழந்தைகள் நலவாரியம் மூலம் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் அந்த சிறுமியை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை நடத்தினர் .

இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில் விக்கி, முகிலன், சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர் .

இதனிடையில் புதுச்சேரி எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த விக்கி, சூர்யா, முகிலன், தேவா, கண்ணதாசன் ஆகிய 5 பேர்  கைதுசெய்யப்பட்டனர்.

தற்போது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்