புதுச்சேரியில் வெடிகுண்டு தயாரித்த RSS நிர்வாகி.. பாதியில் வெடித்ததால் கைகள் துண்டானது

Default Image

 

புதுச்சேரி, வாழைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, 29; RSS உறுப்பினரான இவர் மீது கலவரத்தை தூண்டுதல் கொலை, அடிதடி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர், நேற்று முன்தினம், புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பில், வாடகை வீட்டில் குடியேறினார். நேற்று காலை, 7:15 மணியளவில், கார்த்தி குடியேறிய வீட்டில், பயங்கர வெடி சத்தம் கேட்டதுடன், கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கார்த்தி வீட்டு முன் திரண்டனர். உள்ளே சென்று பார்த்த போது, இரண்டு கைகளிலும் விரல்கள் முழுவதும் சிதைந்த நிலையில், கார்த்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.போலீசார், கார்த்தியை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். முதல் கட்ட விசாரணையில், நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது, எதிர்பாராத விதமாக வெடித்ததில், விபத்து ஏற்பட்டது தெரிந்தது.
யாரை கொலை செய்ய வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்றும் டிசம்பர் 6 முனனிட்டு முஸ்லிம்கள் நடத்தும் பேரணியை சீர்குலைக்க திட்டம் தீட்டினார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்