புதுச்சேரியில் பேருந்து கட்டணம் நள்ளிரவு முதல் திடீரென உயர்வு!

Default Image

புதுச்சேரியில் பேருந்து கட்டணம் நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.முன்னதாக தமிழகத்தை போல புதுச்சேரியிலும் பேருந்து கட்டண உயர்வு என அறிவிக்கபட்ட நிலையில் அப்போது பலத்த எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில் உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.பின்னர் கடந்த வாரம் பேருந்து கட்டண உயர்வுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.இதையடுத்து நகர்புற மற்றும் புறநகர் பேருந்து கட்டண உயர்வை உயர்த்தி புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இதன்படி குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகவும்,அதிக பட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்