புதன்கிழமை கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்க உள்ளார். 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் இரண்டு நாட்கள் மட்டும் முதலமைச்சராக நீடித்த எடியூரப்பா தமது பதவியை ராஜினாமா செய்த சிறிது நேரத்தில், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, ஆளுநர் தம்மை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பதவியேற்பு விழாவுக்கு சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 15 அமைச்சர் பதவிகளும், காங்கிரசுக்கு 16 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. துணை முதலமைச்சராக கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா பதவியேற்பார் என்றும், நிதியமைச்சர் பொறுப்பை குமாரசாமியே வைத்துக் கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பதவியேற்பு விழாவை 23ம் தேதி நடத்த காங்கிரஸ் -மதசார்பற்ற ஜனதா தள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…