மராட்டிய அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், கரண்டிகள் என பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.
இருப்பில் இருக்கும் அந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கு மாநில அரசு கொடுத்து உள்ள மூன்று மாத கால அவகாசம் இன்னும் சில தினங்களில் முடிகிறது. வருகிற 23-ந் தேதி முதல் மும்பையில் மேற்படி பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை முழுவதுமாக அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
இதன்பின்னர் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்து உள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் பிளாஸ்டிக் தடைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுபற்றி சில்லறை வியாபாரிகள் வெல்பர் அசோஷியேசன் தலைவர் விரன் ஷா கூறுகையில், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உள்ள மராட்டிய அரசு அதற்கான மாற்று பயன்பாட்டை தெரிவிக்கவில்லை.
இது எங்களுக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். சில்லறைக்கு வாங்கப்படும் எண்ணெய், சீனி, பருப்பு வகைகள், அரிசி உள்ளிட்ட பொருட்களை பேப்பர் பைகளில் கொடுப்பது சாத்தியமற்றது.
பிளாஸ்டிக் பைகள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வியாபாரிகள் சங்கங்கள் கூடி வருகிற 20-ந் தேதி விவாதிக்க உள்ளோம். இதில், பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…