Categories: இந்தியா

பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை கண்டித்து கடையடைப்பு போராட்டம்..!

Published by
Dinasuvadu desk

மராட்டிய அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், கரண்டிகள் என பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

இருப்பில் இருக்கும் அந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கு மாநில அரசு கொடுத்து உள்ள மூன்று மாத கால அவகாசம் இன்னும் சில தினங்களில் முடிகிறது. வருகிற 23-ந் தேதி முதல் மும்பையில் மேற்படி பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை முழுவதுமாக அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

இதன்பின்னர் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்து உள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் பிளாஸ்டிக் தடைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுபற்றி சில்லறை வியாபாரிகள் வெல்பர் அசோஷியேசன் தலைவர் விரன் ஷா கூறுகையில், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உள்ள மராட்டிய அரசு அதற்கான மாற்று பயன்பாட்டை தெரிவிக்கவில்லை.

இது எங்களுக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். சில்லறைக்கு வாங்கப்படும் எண்ணெய், சீனி, பருப்பு வகைகள், அரிசி உள்ளிட்ட பொருட்களை பேப்பர் பைகளில் கொடுப்பது சாத்தியமற்றது.

பிளாஸ்டிக் பைகள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வியாபாரிகள் சங்கங்கள் கூடி வருகிற 20-ந் தேதி விவாதிக்க உள்ளோம். இதில், பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago