உத்தர பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை துறையின் தலைவராக இருப்பவர் மருத்துவர் ரிஸ்வான் அகமது கான்.
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி ரியா குமாரி என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கான் தலைமையிலான மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 21ல், பிறந்து 244 நாட்கள் ஆன அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஒன்றை நடத்தியது. இதில், 3 பித்த கற்கள் நீக்கப்பட்டன. அதனுடன் பித்தப்பையும் நீக்கப்பட்டன.
அது சிகிச்சைக்கு பின் முழுவதும் நலமடைந்து உள்ளது. இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த பின் மருத்துவ அதிகாரிகள் இதுபற்றி கின்னஸ் புத்தக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கடந்த 6 மாதங்களில் பெண் குழந்தை தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்து இறுதியில் தங்களது வலைதளத்தில் சாதனையை பதிவிட்டுள்ளனர்.
இதற்கு முன் பிறந்து 271 நாட்கள் ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தது கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. அதனை இந்த சாதனை முறியடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…