பிரிட்டனில் ராணி எலிசபெத், பிரதமர் தெரேசா மோவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்!

Published by
Venu

பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பக்கிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் பிரதமர் தெரசா மே உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.

ஸ்வீடனில் நடைபெற்ற நோர்டிக் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு, இன்று காலை பிரிட்டன் சென்றடைந்தார். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பிரதமர் மோடியை, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அதன்பின்னர், பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், விசா மற்றும் குடிமையுரிமை விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்தும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே உடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார். தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.

அதன்பிறகு பக்கிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்திக்கும் பிரதமர் மோடி, லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின்னர், பிரிட்டன் வாழ் இந்தியர்களிடையேயும் உரையாற்ற உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

4 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago