பிரபல தெலுங்கு நடிகர் மோடிக்கு எச்சரிக்கை !பிரதமர் மோடி ஒரு பச்சைத் துரோகி !

Published by
Venu

ஆந்திர  நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆந்திர மாநிலத்துக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டார், அவர் ஒருதுரோகி , ஏமாற்றுக்காரர் என்று  கடுமையாக சாடியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்த மத்திய அரசு 4 ஆண்டுகளாகியும் வழங்கவில்லை. இதையடுத்து, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இருந்து தெலங்கு தேசம் கட்சி வெளியேறியது, அமைச்சரவையில் இருந்தும் வெளியேறியது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரக்கோரி நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.ஆனால், நாடாளுமன்ற முடக்கம் காரணமாக, அந்த நோட்டீஸ் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், ஆந்திரமாநிலத்துக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்காகவும், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்த நாளான நேற்று விஜயவாடாவில் உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹிந்துபுர் தொகுதியின் எம்எல்ஏவும், நடிகருமான பாலகிருஷ்ணா பேசியதாவது:

ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருகிறோம் எனக் கூறி 4ஆண்டுகளாக மத்தியில் ஆளும்பாஜக அரசு நம்மை ஏமாற்றிவிட்டது. ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டார். நமக்கும், மத்தியஅரசுக்கும் இடையிலான போர் தொடங்கிவிட்டது. பிரதமர் மோடியின் மர்மமான அரசியல் சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் ஆந்திராவில் நடக்காது. வரும் நாடாளுமன்றத்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது.

ஆந்திர பிரதேசத்தை குஜராத் என்று மோடி நினைத்துக்கொண்டு இருக்கிறார். அவர்களின் ஆட்சி இங்கு நடக்காது. தெலுங்கு பேசும் மக்கள் மிகுந்த துணிச்சல் மிக்கவர்கள். கடந்த 1984ம்ஆண்டு என்டிஆர் அரசை கலைக்கும் போது, காங்கிரஸ் அரசுக்கு தாங்கள் யாரென்று இந்த மாநில மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

இப்போது ஆந்திர மக்கள் மட்டும் மோடிக்கு எதிராக இல்லை, இந்த நாடே மோடிக்கு எதிராக கிளம்பி இருக்கிறது.இப்போது நான் சொல்கிறேன், மோடி நீங்கள் ஒரு துரோகி, ஒரு ஏமாற்றுக்காரர். துணிச்சலாக வெளியே வந்து மக்களைச் சந்தியுங்கள். அவர்களிடம் பேசுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் எங்கு சென்றாலும் மக்கள் உங்களை துரத்தி துரத்தி அடிப்பார்கள். நீங்கள் எந்தவிதமான பதுங்கு குழியில் இருந்தாலும் மக்கள் உங்களை விடமாட்டார்கள் என்று பாலகிருஷ்ணா பேசினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

20 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

45 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

2 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

2 hours ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago