பிரதமர் மோடிக்கு மக்கள்மீண்டும் வாக்களிப்பார்கள்..!

Default Image

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பட்னாவிஸ், வாஷிங்டன் நகரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில், 67 ஆண்டுகளில் செய்யாத பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதேநேரம் 67 ஆண்டுகளில் எதுவுமே நிகழவில்லை என்று கூற முடியாது. ஆனால், ஏழை, நடுத்தர மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் வகையில் நாம் முன்னேறிய போதிலும் 50 சதவீத மக்கள் கழிவறை வசதி இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் கழிவறைகள் கட்டுவது, அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்குவது, அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி, அனைவருக்கும் வீடு, சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் 2019-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்கப் போகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்