கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 982 இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்திலும், 929 இடங்களைப் பெற்று பா.ஜ.க இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
கர்நாடகாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 105 நகர உள்ளாட்சி அமைப்புகள், மைசூரு, துமகூரு, சிவமோகா ஆகிய 3 மாநகராட்சிகளில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 67.51 சதவிகித ஓட்டுகள் பதிவாகின. இத்தேர்தலில் 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில் எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் 2,709 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காங்கிரஸும் ஜனதா தளமும் கூட்டணி ஆட்சியில் உள்ள நிலையிலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாகவே போட்டியிட்டன. நேற்று காலை முதலே காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவில் காங்கிரஸ் 982 இடங்களையும், பா.ஜ.க 929 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 307 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. நகர்ப்புறங்களில் அதிக இடங்களில் பா.ஜ.க-வும், கிராமப்புறங்களில் காங்கிரஸும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன….
DINASUVADU
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…