Categories: இந்தியா

பா.ஜனதா-சிவசேனா தனித்து போட்டி..!

Published by
Dinasuvadu desk

மராட்டிய சட்ட மேல்-சபை தொகுதிகளான மும்பை பட்டதாரிகள் தொகுதி, ஆசிரியர்கள் தொகுதி, கொங்கன் பட்டதாரிகள் தொகுதி, நாசிக் ஆசிரியர்கள் தொகுதி ஆகிய 4 தொகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம்(ஜூலை) 7-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தொகுதிகளுக்கு வருகிற 25-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதில் பட்டதாரிகள் தொகுதிக்கு அந்த தொகுதியில் வசிக்கும் பட்டம் பெற்றவர்களும், ஆசிரியர்கள் தொகுதிக்கு அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் வாக்களித்து வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்தநிலையில் கொங்கன் பட்டதாரிகள் மற்றும் மும்பை ஆசிரியர்கள் ஆகிய 2 மேல்-சபை தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. கொங்கன் பட்டதாரிகள் தொகுதியில் சிவசேனா சார்பில் சஞ்சய் மோரேயும், பா.ஜனதா சார்பில் தவ்காரே என்பவரும் போட்டியிடுகின்றனர். இதில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் நஜீப்முல்லாவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.

இதேபோல மும்பை பட்டதாரிகள் தொகுதியில் பா.ஜனதாவின் அமித் மேதாவும், சிவசேனாவின் விலாஸ் போட்னிசும் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளரை ஆதரிக்கின்றன. மும்பை பட்டதாரிகள் தொகுதி உறுப்பினரான மாநில சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த்துக்கு இந்த தேர்தலில் சிவசேனா வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பால்கர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா மற்றும் சிவசேனா மோதிக் கொண்ட நிலையில் தற்போது மீண்டும் மேல்-சபை தேர்தலில் எதிரெதிராக போட்டியிடுவதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago