பாவ மன்னிப்பு கேட்கவந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை:பாதிரியார்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!
கேரளாவில் உள்ள கோட்டயம் அருகில் பாவ மன்னிப்பு கேட்கவந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் மிரட்டப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
முன்னதாக கேரளாவில் கோட்டயத்தில் பாலியல் குற்றச்சாட்டு கூறிய கன்னியாஸ்திரிக்கு எதிராக பிஷப்பும் போலீசில் புகார் செய்தார்.
இடமாற்றம் செய்ததால் பழிவாங்க பாலியல் புகார் கூறியதாக கன்னியாஸ்திரி மீது பாதிரியார் குற்றச்சாட்டினார். 2014 முதல் 4 ஆண்டுகள் பிஷப் பிரான்கோ பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.