பாஜக தலைவரை கன்னத்தில்  அறைந்த காங்கிரஸ் எம் .எல்.ஏ…!பரபரப்பை ஏற்படுத்திய பாஜக -காங்கிரஸ் மோதல் …!

Default Image

பாஜக தலைவர் ஒருவரை பொது இடத்தில் வைத்து கன்னத்தில்  அறைந்த காங்கிரஸ் எம் .எல்.ஏ-வின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி மத்திய பிரதேச மாநிலம் தண்டா பகுதில் குழந்தை பலியானது.இந்த குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்காக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாஜகவினர் ஒரே நேரத்தில் சென்றனர்.பின்  இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமாங் சிங்கார், உள்ளூர் பா.ஜ.க. தலைவர் பிரதீப் காடியா என்பவரை கன்னத்தில் அறைந்தார்.பலியான குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதில்  பாராட்டை பெற வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிரச்சனை வெடித்தது.
இதன் பின் அங்கிருந்த போலீஸார் இருதரப்பையும் தடுத்து பிரித்துவிட்டனர். இதுகுறித்து பிரதீப் காடியா கொடுத்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. உமாங் சிங்கார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்