மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜியும், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும், பாஜக – காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சியை மத்தியில் உருவாக்குவதே தங்களது நோக்கம் என தெரிவித்துள்ளனர்.
பாஜக – காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணியை உருவாக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜியின் முயற்சிக்கு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அண்மையில் ஆதரவு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, கொல்கத்தா சென்று மம்தா பாணர்ஜியை சந்திர சேகர ராவ் சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேர சந்திப்புக்குப் பின்னர் இரண்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, மத்தியில் கூட்டாட்சியை அமைப்பதற்கான புதிய அணியை உருவாக்கும் முயற்சிக்கு, இந்த சந்திப்பு நல்ல தொடக்கமாக அமைந்திருப்பதாக மம்தா பானர்ஜி கூறினார். அரசியலில், மாற்றத்திற்கான தொடர் செயல்பாடுகள் தவிர்க்க முடியாதவை எனத் தெரிவித்த மம்தா, மத்தியில் ஒரு கட்சி மட்டுமே ஆட்சி நடத்தும் நிலை இனியும் தொடரக் கூடாது எனக் கூறினார்.
2019 மக்களவைத் தேர்தலின் போது, பாஜக – காங்கிரஸ் அல்லாத மற்றொரு அணி களத்தில் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறிய சந்திர சேகர ராவ், 71 ஆண்டுகளாக எந்த பயனையும் தராத தற்போதைய அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர்கள் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இது கட்சிகளுக்கான கூட்டணியாக இல்லாமல், மக்களுக்கான அரசியலாக இருக்கும் எனவும் சந்திர சேகர ராவ் தெரிவித்தார். இந்த கூட்டமைப்பிற்கான தலைமையும் கூட்டுப்பொறுப்பைக் கொண்டதாகவே இருக்கும் என்றும் சந்திர சேகர ராவ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…