பாஜகவை எதிர்த்தால் காங்கிரஸ் கட்சி தோல்வியையே சந்திக்கும் !அமைச்சர் ராஜ்நாத் சிங்

Published by
Venu

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களை தவறாக சித்தரிக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைவதாக தெரிவித்துள்ளார்.

நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், பொதுநல மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசையும், பாரதிய ஜனதா கட்சியையும் தவறாக சித்திரிக்க முயல்வதை இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியிருப்பதாகவும், ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தீய நோக்கத்துடன் காங்கிரஸ் செயல்படுவதை, இத்தீர்ப்பு மீண்டும் நிரூபித்திருப்பதாக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பலரை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…

7 mins ago

உதயநிதிக்கு கிரீன் சிக்னல்.? “ஏமாற்றம் இருக்காது” மு.க.ஸ்டாலின் ‘பளீச்’ பதில்.!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…

12 mins ago

INDvsBAN : 2-வது டெஸ்ட் போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வானிலை அறிக்கை கூறுவது என்ன?

கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…

21 mins ago

மெய்யழகனுக்கு U சான்றிதழ்… போர் அடிக்காமல் காப்பாத்துவாரா இயக்குனர்.?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…

40 mins ago

ரவுடிகள் மீதான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்.! சென்னை முதல் கன்னியகுமரி வரை…

சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…

54 mins ago

“பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை”….அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி கைது?

சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…

1 hour ago