Categories: இந்தியா

பாஜகவுக்கு இடைத்தேர்தலில் பெரும் பின்னடைவு..!எதிர்க்கட்சிகள் உற்சாகம்

Published by
Venu

எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் மோடி அலைக்கு எதிரான வெற்றியை  அளித்துள்ளது. இந்த முடிவுகள் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக எண்ணி காங்கிரஸ் கட்சி உற்சாகம் அடைந்துள்ளது.

நான்கு மக்களவைத் தொகுதிகள் பத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலின் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜக மகாராஷ்ட்ராவில் பால்கர் மக்களவைத் தொகுதியை மட்டும் கைப்பற்றியது. பெங்களூர் ஆர்.ஆர்.நகர் சட்டமன்ற தொகுதியில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் நடைபெற்றது.

இதன் முடிவுகளும் நேற்று வெளியாகின. அதில் காங்கிரஸ் அத்தொகுதியை கைப்பற்றியது. பாஜகவின் தோழமைக் கட்சிகளான சிவசேனா, அகாலி தளம் போன்றவையும் பாஜகவுடன் அதிருப்தி அடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு பாஜகவை எதிர்த்தால் அதனை வீழ்த்துவது சாத்தியம்தான் என்ற புதிய தாரக மந்திரம் கிடைத்திருப்பதால் காங்கிரஸ் உற்சாகம் அடைந்துள்ளது.
ஒரு முடிவின் ஆரம்பம் இது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அனைத்துத் தரப்பிலும் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டதற்கு மக்கள் பதிலடி தந்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

பிரதமர் மோடி அரசின் மீதான மக்களின் கோபத்தை இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை நம்பாத மோடி அரசுக்கு கிடைத்த தோல்வி இது என்றும் மக்களை ஏமாற்றியதற்கு கிடைத்த தண்டனை என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு கிடைத்த அடி என்று தெலுங்குதேசம் கட்சி தெரிவித்துள்ளது. மக்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இந்த எச்சரிக்கை பாஜகவுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார்.

ஆனால் ஒரு பெரும் பாய்ச்சலுக்கு முன்பு இரண்டு அடி பின்னோக்கி போவது இயல்பு தான் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

11 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago