பாஜகவினர் பேச்சே சரியில்லை!ஊடகங்களுக்கு தேவை இல்லாமல் விளம்பரம் கொடுக்க வேண்டாம்! பிரதமர் நரேந்திர  மோடி

Published by
Venu

பிரதமர் நரேந்திர  மோடி ,அரைவேக்காட்டுத் தனமான கருத்துகளைக் கூறி, பரபரப்பு செய்திகளுக்கு தேவையான மசாலாவை ஊடகங்களுக்கு அளிக்க வேண்டாம் என பாஜக தலைவர்களை கண்டித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பாஜக தலைவர்கள் பலர், முக்கியப் பிரச்சினைகளில் முரண்பாடான கருத்துகளைக் கூறி சர்ச்சையில் சிக்குவது அதிகரித்து வருகிறது. மகாபாரத காலத்திலேயே இணையதளம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது, டார்வினின் பரிணாமக் கோட்பாடு தொடர்பான பகுதியை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும், ஆங்காங்கே நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை மிகைப்படுத்திப் பேசி பொதுவான அடையாளமாகக் கூடாது என்பது போன்ற கருத்துகள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. தமிழகத்தில் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகர் போன்றோர் அண்மையில் பெண்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துகளால் கடும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் நமோ ஆப் மூலம் பாஜக எம்பி, எம்எல்ஏக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடிய பிரதமர் மோடி, அரைவேக்காட்டுத் தனமான கருத்துகளால் ஊடகங்களுக்கு மசாலா அளிப்பதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சமூக விஞ்ஞானிகளைப் போலவும், வல்லுநர்களைப் போலவும் தங்களைக் கருதிக் கொண்டு கருத்துகளைக் கூறுவதற்கு முன்னர், எதிரே கேமராக்கள் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் கருத்துக் கூறுபவரது அடையாளத்தை மட்டுமின்றி, கட்சியின் மதிப்பையும் குலைக்கும் என்பதை பாஜகவினர் உணர வேண்டும் எனவும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

11 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago