பாகிஸ்தான் ராணுவம் சுட்டு ஒரு இந்திய வீரர் பலி…!!
காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் மேலும் ஒரு இந்திய வீரர் பலியானார்.
காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எனவே எல்லையில் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இருப்பினும் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் நேற்று இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் அதே மாவட்டத்துக்கு உட்பட்ட நவுசாரா செக்டர் கலல் என்ற இடத்தில் இன்று பாகிஸ்தான் வீரர்கள், இந்திய வீரர்கள் மீது மீண்டும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்திய வீரர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்தியா தரப்பில் பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
dinasuvadu.com