Categories: இந்தியா

பயங்கரவாத விவகாரத்தில் பா.ஜனதா அரசு எந்தஒரு சமரசமும் செய்யாது -ஜிதேந்திர சிங்..!

Published by
Dinasuvadu desk
மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பேசுகையில், பாரதீய ஜனதா அரசு காஷ்மீர் விவகாரத்தில் மென்மையான போக்கை கொண்டு உள்ளது என்ற தவறான செய்தி மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் நாட்டின் இறையாண்மையில் ஒருபோதும் அரசு சமரசம் செய்யாது என குறிப்பிட்டு உள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாதத்தையொட்டி பாதுகாப்பு படைகள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இருப்பினும் பொதுமக்களை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பயங்கரவாதிகள் தரப்பில் துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் ரமலான் மாதத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சண்டை நிறுத்தம் தொடருமா? என்ற கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், இதில் இறுதி முடிவை மத்திய உள்துறை அமைச்சகம்தான் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.
ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துரதிஷ்டவசமாக காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசு மென்மையான போக்கை கொண்டு உள்ளது என்ற செய்தி வெளியாகி வருகிறது. இதை தவிர்த்து இருக்கலாம் என நீங்கள் உணரும் நாள் வரும். பயங்கரவாதம் மற்றும் நாட்டின் இறையாண்மை என்பதில் எந்தஒரு சமரசமும் கிடையாது. பயங்கரவாதிகளை எதிர்க்கொள்வதில் மென்மையான போக்கு கிடையாது. இவ்விவகாரத்தில் எங்களுக்கென யுத்திகள் உள்ளது,” என கூறியுள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago