பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 2 போலீசாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய காவலர்கள்.!

Default Image

துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த இரண்டு காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பயங்கரவாதிகள் சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், ஜம்மு காஷ்மீரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  இரண்டு போலீசார் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார்.

தற்போது நவ்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த இரண்டு காவல்துறையினருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் காவல் துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்