பயங்கரவாதம் என்ற வார்த்தையை நீக்காவிட்டால் சி.ஐ.ஏ.வுக்கு எதிராக உலக அளவில் போராட்டம் நடைபெறும் என்று வி.ஹெச்.பி தெரிவித்துள்ளது.
விஎச்பி அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிஐஏவின் குற்றச்சாட்டு பொய்யானது, ஆதாரமற்றது. ஒசாமா பின்லேடனை உருவாக்கியதே சிஐஏ தான். சிஐஏ வரைபடத்தில் காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதி இந்தியாவை சேராதது என குறிப்பிட்டுள்ளது. இது சிஐஏ.வின் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. விஎச்பி.யை மத தீவிரவாத அமைப்பு என கூறியதற்கு, சிஐஏ மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு எதிராக விஎச்பி போராட்டம் நடத்தும். இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ ,விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றை மத தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்தது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தேசியவாத அமைப்பாகவும் சிஐஏ அடையாளப்படுத்தி உள்ளது. சர்வதேச அளவிலான தீவிரவாத மற்றும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள அமெரிக்க உளவு அமைப்பு, இந்தியாவில் செயல்படும் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இயக்கங்கள் பட்டியலிலும் சேர்த்துள்ளது.
ஹூரியத் இயக்கத்தை பிரிவினைவாத அமைப்பாகவும், மதானி தலைமையிலான ஜமியாத் உலமா ஹிந்த் ( Jamiat Ulema-Hind) அமைப்பை மத தீவிரவாத அமைப்பாகவும் சிஐஏ பட்டியலிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…