பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் போதும்………..மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கூட இப்படி இல்லை…பட்டாசுக்கு வெடித்த பாஜக…!!!

Default Image

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.
Image result for FIREWORKS BAN COURT
மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் இதனை பின்பற்றாத நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கையும் விடுத்தது.தீபாவளிக்கு இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற  கட்டுப்பாடும் விதித்தது.
Image result for FIREWORKS BAN COURT
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி தீபாவளிக்கு இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற  கட்டுப்பாடு மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கூட இருந்ததில்லை என்று பாஜக விமர்சித்துள்ளது.
Image result for பட்டாசு
பாஜக மக்களவை உறுப்பினரான சிந்தாமணி மாளவியா பட்டாசு விவகாரத்தில் குறித்து அளித்த பேட்டியில் தீபாவளி பூஜை எப்போது நடைபெறும் நேரத்தை நீதிமன்றத்தால் நிர்ணயிக்க முடியாது பூஜை நேரத்தில்தான் பட்டாசு வெடிப்பார்கள் என்ற வழக்கத்தைகூட நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை விட வழக்கத்தைப் பின்பற்றுவதையே தாம் விரும்புவதாகவும் நிதிமன்ற  தெரிவித்தார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்