Categories: இந்தியா

பஞ்சாப் ரயில் விபத்து…பதறவைக்கும் தகவல்…செல்பி மோகமும் ஒரு காரணமா..?

Published by
Dinasuvadu desk

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நேற்று நடந்த ரயில் விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் பலர், தண்டவாளத்தில் இருந்து  செல்பி எடுத்து கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கூட ரயில் வருவதை அவர்கள் கவனிக்காமல் இருக்க காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் செளரா பஜார் பகுதியில் உள்ள ஜோடா பதக் என்ற பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய காலி இடத்தில், நேற்று தசரா கொண்டாட்டம் நடந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக, மாலை 6.45 மணிக்கு ராவணன் உருவ பொம்மை பட்டாசுகள் மூலம் கொளுத்தப்பட்டது. பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தண்டவாளம் வழியாக ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் ரயில் அதிவேகத்தில் கடந்து சென்றது.
இந்த கோர விபத்தில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடைபெற்றுவதற்கு முன்னர், அங்கு ராவண உருவ பொம்மை கொளுத்தப்பட்டதை பலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ரயில் மக்கள் மீது மோதுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. வீடியோவில் பார்க்கும் போது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பலர், ராவண வதத்தை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். மேலும், பலர் செல்பி எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர்.இதனால் கூட, ரயில் வருவதை அவர்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முந்தைய கால கட்டங்களிலும் செல்பி மோகத்தால் பல பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

4 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

17 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

33 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

36 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

43 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

48 mins ago