Categories: இந்தியா

நெல் ஜெயராமனின் மறைவு வேளாண்மைத் துறைக்கு பேரிழப்பு.. முதல்வர் பழனிசாமி இரங்கல்…!!

Published by
Dinasuvadu desk

பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிய நெல் ஜெயராமன் காலமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நமது நெல்லை காப்போம் என்ற இயக்கத்தின் மூலம் மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி போன்ற 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பிரபலப்படுத்தியவர் நெல் ஜெயராமன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான வேளாண் மக்களை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் உற்பத்தியை உயர்த்திய பெருமைக்குரியவர் ஜெயராமன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் அவர் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் அவருக்கு கடந்த 14ஆம் தேதி 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, தான் உத்தரவிட்டதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பாகும் என்று கூறியுள்ள முதலமைச்சர், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் வேளாண் மக்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
DINASUVADU.COM 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

11 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago