Categories: இந்தியா

நீர் பாசன திட்டத்தை நிறைவேற்ற கோடிக்களை கொடுத்து உதவிய சீரடி சாய்பாபா..!!

Published by
kavitha

கோதாவரி நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற மகாராஷ்ரா அரசுக்கு ரூ.500 கோடியை  வழங்க சீரடி சாய்பாபா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
மகாராஷ்ராவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக குறைந்த அளவிலே மழைபெய்துள்ளது.இதனை அடுத்து அந்த பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. மேலும்  5 கிலோமீட்டர் வரை மக்கள் தண்ணீருக்காக  நடந்து செல்வதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் மகாராஷ்ரா மாநிலத்தில் மரத்வாடா பகுதி மிகவும் வறட்சியானப் பகுதி இங்கு தான்  இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவான மழை  பெய்து உள்ளது.
Related image
மேலும் மாநிலத்தில் பல பகுதிகளில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில் கோதாவரி ஆற்றில் இருந்து மரத்வாடா பகுதிக்கு இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை மகாராஷ்ரா மாநில அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில் விரைவாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவிய நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற நிதிபற்றாக்குறை ஏற்பட்டு திட்டத்தை அரசு கிடப்பில் போட்டு விட்டது. இதனிடையே ஏற்கனவே சாய்பாபா கோவிலில் வரும் நிதியில் இருந்து ரூ.500 கோடி கடனாக  வாங்குவதற்குஅம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் ஒரு  கூட்டம் நடைபெற்று ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கோதாவரி நீர்ப்பாசன திட்டத்தை விரைவில் செயல்படுத்த ரூ.500 கோடி நிதியை சாய்பாபா கோவில் வட்டியில்லாமல் வெறும் கடனாக வழங்குகிறது. திட்டத்தை செயல்படுத்திய பின் மாநில அரசு இதனை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி செலுத்தலாம் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாய்பாபா கோவிலின்  வரலாற்றிலேயே  அரசின் ஒரு திட்டத்திற்கு கோவில் கடன் வழங்குவது இதுவே முதன்முறை. மேலும் சாய்பாபா அறக்கட்டளை இதற்கு முன்னரும் மகாராஷ்ரா மாநிலத்தில் 4 அரசு மருத்துவ கல்லூரிகளின் மேம்பாட்டுக்காக  ரூ.71 கோடி நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago