நீதிபதி லோயா மரணம் விவகாரம் :உச்ச நீதிமன்றம் அதிரடி! சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை!

Default Image

உச்சநீதிமன்றம், நீதிபதி லோயா மரணம் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை என  தெரிவித்துள்ளது. 

மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்ட குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்தார்.

இதனிடையே நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கியது. இதில் இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாக கூறி, சிறப்பு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்