Categories: இந்தியா

"நீதிபதியின் சூட்டு மனைவி, மகன் கொலை"பாதுகாவலர் கைது ..!!

Published by
Dinasuvadu desk

நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்

டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தில், நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகன்  மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே, இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குர்கானில் உள்ள ஆர்கடியா மார்க்கெட் அருகே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலரின் பெயர் மகிபால் என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய கையோடு, அருகாமையில் உள்ள சதார் போலீஸ் நிலையத்திற்கு மகிபால் சென்றுள்ளார். போலீசார் பிடிக்க முற்படவே, துப்பாக்கியால் சுட்ட படி, தப்பி ஓடியுள்ளார். சிறிது நேரத்தில், மகிபாலை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடுக்கான பின்னணி காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

முதற்கட்ட விசாரணையில், நீதிபதியின் குடும்பத்தினர் , பாதுகாவலர் மகிபாலை மிகவும் மோசமாக நடத்தியதால், ஏற்பட்ட விரக்தியில் துப்பாக்கியால் சுட்டதாக வாக்குமூலம் அளித்தாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது .
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

13 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago