நிதிஷ்குமார் பாஜகவுடன் தொடர்பைத் துண்டித்தால் மகாகூட்டணி அமைக்கலாம் : சக்திசிங் கோகில்

Default Image

தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை நிதிஷ்குமார் துண்டித்துக்கொண்டால் மீண்டும் மகாகூட்டணியை அமைக்கலாம் எனக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோகில் தெரிவித்துள்ளார்.

பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்து வென்றன. பின்னர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ராஷ்டிரிய ஜனதாதளம் விலக்கிக்கொண்டது. இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைத்தது.

இந்நிலையில் பீகார் காங்கிரஸ் பொறுப்பாளரும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சக்தி சிங் கோகில், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை நிதிஷ்குமார் துண்டித்துக்கொண்டால் பீகாரில் மீண்டும் மகாகூட்டணியை அமைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்