முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,தான் பிரதமராக இருந்த போது பிரதமர் மோடி தனக்கு கூறிய அறிவுரைகளை தற்போது பின்பற்ற வேண்டிய காலம் வந்து விட்டதாக கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்தநிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இதுபோன்ற சமயங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் உண்மைகளை பேசி சமூகத்தை வழிநடத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட அவர், அமைதியாக இருப்பதன் மூலம் நாட்டில் அதிகமான குழப்பங்களே விளையும் எனவும் எச்சரித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் பிரதமராக இருந்த போது, தனக்கு கூறிய அறிவுரைகளை பிரதமர் மோடி தற்போது பின்பற்ற வேண்டிய காலம் வந்துவிட்டதாக மன்மோகன் சிங் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…