நான் பிரதமராக இருந்த போது பிரதமர் மோடி எனக்கு கூறிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டிய காலம் வந்து விட்டது! மன்மோகன் சிங்

Default Image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,தான் பிரதமராக இருந்த போது பிரதமர் மோடி தனக்கு கூறிய அறிவுரைகளை தற்போது பின்பற்ற வேண்டிய காலம் வந்து விட்டதாக கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்தநிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இதுபோன்ற சமயங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் உண்மைகளை பேசி சமூகத்தை வழிநடத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட அவர், அமைதியாக இருப்பதன் மூலம் நாட்டில் அதிகமான குழப்பங்களே விளையும் எனவும் எச்சரித்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் தான் பிரதமராக இருந்த போது, தனக்கு கூறிய அறிவுரைகளை பிரதமர் மோடி தற்போது பின்பற்ற வேண்டிய காலம் வந்துவிட்டதாக மன்மோகன் சிங் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்