நான்கு ஆண்டுகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு பூர்த்தி செய்ய உள்ள நிலையில், மத்திய அரசின் சாதனைகள் குறித்த பிரச்சாரத்தை அமித் ஷா தொடக்கம்!

Default Image

பாஜக தலைவர் அமித் ஷா,பிரதமர் மோடி தலைமையிலான அரசு நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்ய உள்ள நிலையில் மத்திய அரசின் சாதனைகள் குறித்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

வருகிற 26ம் தேதியுடன் மோடி அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது.அன்றைய தினம் ஒடிசா செல்ல திட்டமிட்டுள்ள பிரதமர் மோடி, டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடி அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்கள் முன்பு கொண்டு செல்ல பிரச்சாரம் மேற்கொள்ளும்படி பா.ஜ.க. மூத்த தலைவர்களும், மாநில முதலமைச்சர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாஜக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் முன்னாள் ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள் இலக்கியவாதிகள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களை சந்திக்கவும் அவர்களின் ஆதரவைக் கோரவும் பணிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று, பாஜகவின் திட்டங்களை விளக்க, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்