நாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், 500 ரூபாய் அச்சடிப்பது குறித்து ஆலோசனை !

Published by
Venu

 மத்திய அரசு,நாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், 500 ரூபாய் அச்சடிப்பது குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. அதன்பின் புதிய ரூ.2000, ரூ.200, ரூ.500 நோட்டுகள் அச்சடித்து ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடப்பட்டபின் பணப்பழக்கம் சீரடைந்தது.

இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம், பிஹார், தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே பணப்புழக்கம் குறைந்து வந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பல நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் இல்லாமல் காலியாகக் கிடக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, திடீரென, வழக்குத்துக்கு மாறான வகையில் பணத்தின் தேவை அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் போதுமான அளவு கரன்சி இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த திடீர் பணப்பற்றாக்குறையை சில நாட்களில் சரியாகும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி.கார்க் டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அளவை அதிகப்படுத்த இருக்கிறோம். இப்போது நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நோட்டுகள் ரூ.500 கோடி அச்சடிக்கிறோம். இதை அதிகப்படுத்தி, நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நோட்டுகளைஅச்சடிக்கும் அளவை 5 மடங்கு உயர்த்தப் போகிறோம். அடுத்த இருநாட்களில் ரூ.2,500 கோடி வங்கிகளுக்கு அனுப்ப இருக்கிறோம். இந்த மாதத்துக்குள் ரூ.70 ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடி வரையிலான 500 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, ஏப்ரல் 6-ம் தேதி வரை நாட்டில் பணப்புழக்கம் ரூ.18.17 லட்சம் கோடியாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஏறக்குறைய ரூ.5 லட்சம் கோடிக்கு ரூ.20 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

3 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

3 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

3 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

4 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

4 hours ago